வன்புறை
53

 
     வருவேன்`   எனக்   கூறின்,   தலைவன்   பொய்யனெனத்    தோன்றித்
தலைவியிறந்துபடும்.  அதனால் பிரியே னென்றலுடனே பிரிவையும்  அறிவுறுத்திக்
கூறினன் என்பது.   இக்   கிளவிக்குப்   `பிரியேன் பிரியினுந் தரியேன்`   என்று
கூறுவது இலக்கணம். என்னை,

 1`மின்னிற் போலிந்தசெவ் வேல்வலத் தான்விழி ஞத்தெதிர்ந்த
மன்னர்க்கு வானங் கொடுத்தசெங் கோள்மன்னன் வஞ்சியன்னாய்
நின்னிற் பிரியேன் பிரியனு மாற்றே னெடும்பணைத்தோள்
பொன்னிற் பசந்தொளி 2வாடிட வென்னீ புலம்புவதே`
 3`பொன்னாற் புனைகழற் பூழியன் பூலந்தைப் பூவழிய
மின்னா ரயில்கொண்ட வேந்தன் விசாரிதன் வெண்டிரைமேல்
முன்னாண் முதலறி யாவண்ண நின்ற பிரான்முசிறி
யன்னாய் பிரியேன் பிரியனு மாற்றே னழுங்கற்கவே`

எனவும் கூறிய சான்றோர் செய்யுட்களான் உணர்க.

இக்கிளவியில்  அணங்கொடு  சூளுற்றுக் கூறினான் என்பது. சூளுறல்   செய்யுளிற்
கூறியதில்லையால்  எனின்,  வரைவியலில் `துதித்தே னணங்கொடு சூளுமுற்றேன்`
என்பதனானும்,   4"தெய்வம் பொறைகொளச்செல்குவம்"  என்பதனானும்  உணர்க.
இஃது   இக்கிளவிக்கணல்லது  கூறுதற்கு வேறொரிடமும் இன்மையான்  இங்ஙனம்
கூறியதென்று உணர்க.

 5"இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை"

என்னுங் குறிஞ்சிக்கலியுள், சூளுறவு கூறியவாறு உணர்க.

(23)    

பிரிந்துவருகென்றல்:

பிரிந்து  வருகென்றல் என்பது  வெளிப்படை.  பிரிந்துவருகேன்  என்னுஞ் சொல்
விகாரப்பட்டதெனக் கொள்க.

 சென்றே பகைவென்ற திண்படை வாணன் செழுந்தஞ்சைசூழ்
நன்றே தருவையை நாடனை யாய்நம தாருயிர்போல்
ஒன்றே யெனதுரை யூங்குயர் சோலையி னூடொளிந்து
நின்றே வருவலிங் கேவிளை யாடுக நீசிறிதே.



1. இறைய. அகப்பொருள் - 2ஆம் சூ. உரை மேற்கோள்கள்.
(பாடம்) 2. வாடவென்னாங்கொல் புலம்புவதே.
3. தஞ்சைவா. 290. 4. அகப். விளக்கம், வரைவியல் - 6.
5. கலித். குறிஞ்சி - 5.