இடந்தலைப்பாடு
65

 
புகழ்தல்;
புகழ்தல்    என்பது,      தலைவன்     தலைவியைப்     புகழ்ந்து    கூறல்.

 அரும்பாம் அளவில் தனத்தொடொவ் வாயல ராமளவில்
கரும்பா மொழிவத னத்தொடொவ் வாய்களி யானைசெம்பொன்
தரும்1பாரி வாணன் தமிழ்த்தஞ்சை யான்தரி யாரின்முன்செய்
பெரும்பாவ மல்லது நீர்நின்ற பேறல்லி பெற்றிலையே.

(இ-ள்.)   அகவிதழையுடைய தாமரையே, நீ அரும்பாகுங் காலம் கரும்பையொத்த மொழியையுடையாளது    தனத்துக்    கொப்பாகாய்;   அலராகுங்      காலத்து
முகத்தோடொப்பாகாய்; களித்த யானையும்  செம்பொன்னும்  நாவலர்க்குத்  தரும் பாரியென்னும்  வள்ளலுக்கொப்பான  தமிழ்த்தஞ்சை நகரையுடைய  வாணனுக்குப் பகைவரைப்   போல   முன்செய்த   பெரும்  பாவமல்லது,  நீரிலே   தவப்பேறு
பெற்றிலையாயினை என்றவாறு.

எனவே,  தலைவியைப்   புகழ்ந்தவாறாயிற்று.   தனம் - முலை. வதனம் - முகம்.
பாரி - ஓர்   வள்ளல்.  தரியார் - பகைவர். அல்லி: அண்மை விளி: ஆகுபெயர்.

(37)    
ஆயத்துய்த்தல்:
ஆயத்துய்த்தல் என்பது, ஆயக்கூட்டத்துத் தலைவியைச் செலுத்தல்.

 மேவிக் கலைக்கட லென்புலன் மீனுண்டு மீண்டுவந்தென்
ஆவிக் கமலத் தமரன்ன மேநின் அயில்விழிபோல்
வாவிக் கயலுக ளுந்தஞ்சை வாணன் வரையினுடன்
கூவிக் கயங்குடை நின்குயி லாயங் குறுகுகவே.

(இ-ள்.) கலையாகிய கடலில்மேவி, என்னறிவாகிய மீனையுண்டு போய் மீண்டுவந்து,
என்னுயிராகிய கமலத்திற்குடியாக அமர்ந்திருக்கும் அன்னமே! நின்னுடைய  கூரிய
கண்போல   வாவியிற்   கயல்கள்   புரளுந்   தஞ்சைவாணன்  மலையில்  எதிர்
கூவிக்  கயத்துட்  குளித்து   விளையாடும்   நின்னுடைய குயிற்கூட்டம்  போன்ற
ஆயக்கூட்டத்திற் கூடுக என்றவாறு.

`கலைக்கடல் மேவி` என மாறுக. புலன் - அறிவு. கலை கடலாகவும், புலன்
மீனாகவும், அதனை யுண்ணுந் தலைவி அன்ன


1. பாரி   இன்னார்  என்பதனைச் சிறுபாணாற்றுப் படையுள் `சுரும்புண -  நறுவீ
உறைக்கும்   நாக   நெடுவழிச்,   சிறுவீ   முல்லைக்குப்   பெருந்தேர்  நல்கிய,
பிறங்குவெள்   அருவி  வீழுஞ்சாரற், பறம்பிற் கோமான் பாரியும்`  என்றதனானும்
அதற்கு நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணர்க.