|
|
எதிர்மறை. மற்று: அசை. `இது தகுமோ` என இயையும். |
(42) |
கிழவோன் கழற்றெதிர்மறுத்தல்: |
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல் என்பது, பாங்கன் கூறிய கட்டுரையைத் தலைவன் மறுத்துக் கூறல்.
|
| மாலாய் மதம்பொழி வாரண வாணன்தென் மாறையன்னார் சேலார் கருங்கண்ணுஞ் செங்கனி வாயுஞ் சிறறியதுண்ணேர் நூலார் மருங்கும் பெருந்தன பாரமு நும்மையன்றி மேலா னவருங்கண் டாலுரை 1யாரிந்த வீரங்களே. |
(இ-ள்.) மயக்கமாய் மதத்தைப் பொழியும் வாரணத்தையுடைய வாணனது தென்மாறைநாடு போல்வாரது சேல் போன்ற கருங்கண்ணும், செங்கனிபோன்ற வாயும், சிறுமையாகிய நுண்ணிய அழகாகிய நூல்போன்ற இடையும், பெரிய தனபாரமும், கண்டார் நெஞ்சினை உருக்குந் தன்மையில் வலிய என்பதனை யெளியவாகக் கூறினீர்; நும்மையன்றி மேலானவருங் கண்டால் உரையார்கள் இத்தன்மையாகிய வீரமொழிகள் என்றவாறு.
|
எனவே, நீரும் காணாத தன்மையால் இவ்வாறு கூறினீர் என்று கூறியவாறாயிற்று. மால் - மயக்கம். வாரணம் - யானை. சேல் - கயல். `செங்கனி வாய்` என்புழி உவமைத்தொகை. ஏர் - அழகு. `மேலானவரும்` என்புழி உம்மை சிறப்பும்மை; ஏனைய எண்ணின் கண் வந்தன. ஆர் என்பது ஒப்பு. பாங்கன் முன்னிலையெச்சம். |
(43) |
கிழவோற் பழித்தல்: |
கிழவோற் பழித்தல் என்பது, அவ்வாறு கூறிய தலைவனைப் பாங்கன் பழித்துக் கூறல்.
|
| சூரார் சிலம்பிற் சிலம்பிமென் னூல்கொண்டு சுற்றவெற்றிப் போரார் களிறு புலம்பிநைந் தாங்கொரு பூவைகொங்கை வாரா லணைப்ப வருந்தினை நீதஞ்சை வாணன்வெற்பா ஓராழி சூழுல கத்தெவ ரேநின்னை யொப்பவரே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பிலிருப்பவனே! சூர்பொருந்திய மலையினிடத்துச் சிலம்பியானது மெல்லிய நூலைக்கொண்டு சுற்ற, மாற்றார் படையிலே வெற்றிப் போர் செய்கின்ற யானையானது புலம்பி நைந்தாற் போலும், ஒரு பெண்ணினது வார் பாருந்திய கொங்கையாலணைப்ப நீ வருந்தினை; ஆதலால், ஒப்பற்ற ஆழி சூழ்ந்த வுலகத்தில் நின்னை யொப்பவார் யார் என்றவாறு. |
|
1. (பாடம்) யாரின்ன. |