|
|
மனத்தின்கண் பிறரறியாமை அடக்கத்தக்க காரியத்தை யடக்குதல். |
| 1`நிறை யெனப்படுவது மறைபிற ரறியாமை` |
என்றார் பிறரும்.நீயும் என்னும் உம்மை சிறப்பும்மை. பாங்கன்: முன்னிலையெச்சம். |
(45) |
பாங்கன் தன்மனத் தழுங்கல்: |
பாங்கன் தன் மனத்தழுங்கல் என்பது, அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானாய் இவ்வாறு கூறினால் யான் அதற்குத் தான் என் சொல்வேன் என்று தன்னுள்ளே யிரங்குதல்.
|
| சீதன வாரங் கமழ்தஞ்சை வாணன்தென் மாறையன்னாள் காதன வாவெங் கடுவள வாவொளிர் காவியந்தண் போதன வாவிழி யென்னுமென் னாசை புறத்தனவா சூதள வாமுலை யென்னுமென் நாம்இனிச் சொல்லுவதே.
|
(இ-ள்.) எம்பெருமான், குளிர்ச்சி பொருந்திய சந்தனங் கமழப்பட்ட தஞ்சைவாணன் தென்மாறை நாடு போல்வாளது கண்களைக் காதினாலும் அளவிட்டறியப் படா, வெவ்விய விடத்தினாலும் அளவிட்டறியப்பட்ட, விளங்கப்பட்ட அழகிய குளிர்ந்த நீலப்போதினாலும் அளவிட்டறியப்படா என்று சொல்லும்; முலையை மலைபோல் வளர்ந்த என்னாசையிடத்தும் அளவிட்டறியப்படா, வல்லினாலும் அளவிட்டறியப்படா என்று சொல்லு; ஆதலால், நெஞ்சமே, நாம் இன்று சொல்லுவது என் என்றவாறு.
|
ஆரம் - மைந்தரும் மாதரும் மார்பினும் முலையினும் பூசுஞ் சந்தனம். கடு - விடம். காவி - நீலம். `அந்தண் காவி` என மாறுக. புறம் - இடம். சூது - வல். இனி - இன்று. அளத்தல் - அறிதல்; அளவா - அறியப்படா.
|
காதைக் கடந்து போதலான், `காதளவா` என்றும், கடு உண்டாரைக் கொல்லும், அவ்வாறன்றிக் கண்டாரைக் கொல்லுதலான், `கடுவளவா` என்றும், காவிப் பூவிற்குப் பார்த்தறியுங் குணம் இன்மையின், `காவி யந்தண் போதளவா` என்றுங் கூறியது.
|
| 2`காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கு மாணிழை கண்ணொவ்வே மென்று`
|
|
1. கலித். நெய்தல் - 16. |
2. குறள். நலம்புனைந்துரைத்தல் - 4. |