பாங்கற் கூட்டம்

73

 
என்னுங்    குறளினாலுங்   காவிக்குக்   கண்டறியுங்   குணமின்மை    உணர்க.

ஆசையினும்   முலை   பெரிதாகலான்,   `ஆசைப்புறத்தளவா` என்றும்,  வட்டங்
கொண்டு   கவிந்து  வண்ணம்  பொதிந்திருத்தலான், `சூதளவா` என்றுங் கூறியது.
`என்னும்`  என்பது  இரண்டும்   இறுதிவிளக்கு.  நெஞ்சம்:   முன்னிலையெச்சம்.
(46)    
பாங்கன் தலைவனோ டழுங்கல்:
என்மே லறைவது யானிங்கு நின்செவிக் கென்சொலெல்லாம்
வன்மே லடர்கொங்கை காரண மாத்தஞ்சை வாணன்வெற்பா
கன்மே லறைகின்ற மென்முளை போலுங் கடல்வெதும்பில்
தன்மேல் விளாவவுண் டோதரை மேலொரு தண்புனலே.

      (இ-ள்.)     தஞ்சைவாணன்     வெற்பனே,    பேரின்பத்திற்குரிய   நீ
இச்சிற்றின்பத்திற்கு    இத்தன்மையனாதல்   தகாது  என்று,  சூதின்மேற்   பகை
நெருங்குங்   கொங்கையினை   யுடையாள்   காரணமாக,  இங்குக்  கூறும்  என்
சொல்லெல்லாம்  நின் காதுக்குக்  கல்லின்மேல் அறைகின்ற மெல்லிய  மூங்கிலின்
முளைபோலுமாயின;   யான்   மேற்சொல்லுமாறு   யாது?  கடல்   வெப்பமுறின்
அவ்வெப்பம் மாற அக்கடன்மேல் விளாவுதற்குப் பாரிடத்து ஒரு தண்ணீருண்டோ
என்றவாறு.

அறைதல் - சொல்லுதல்.   `யானென் மேலறைவது`   என மாறுக.   வல் - சூது.
அடர்தல் - நெருங்குதல். கொங்கை: ஆகுபெயர். அறைதல் - அடித்தல். முளை -
மூங்கில். வெதும்பல் - வெப்பமுறல். தன், அடிச்சந்த நோக்கிவந்தது. தரை - பார்.
புனல் - நீர்.
(47)    
எவ்விடத் தெவ்வியற் றென்றல்:

      எவ்விடத்   தெவ்வியற்றென்றல் என்பது, எம்பெருமான் இவ்வாறு  கூறியும்
ஆற்றானாயினன்,அதனால், தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறி,
தலைவனை  நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து  எவ்வியலையுடைய
தென்று வினாவுதல்.

முகத்திற் பகழி யிரண்டுடை யார்க்கிட மூரிமுந்நீர்
அகத்திற் பிறந்த அரவிந்த மோவடை யார்தமக்கு
மகத்திற் சனியன்ன சந்திர வாணன்தென் மாறைவெற்போ
நுகத்திற் பகலனை யாய்தன்மை யேது நுவலெனக்கே.