தஞ்சைவாணன் கோவை
77

 
இச்செய்யுளில்    `வரைப்புனம்`  எனவும்  மூங்கிலே  யதிகாரப்பட்டு  வருதலின்
மலையாகாதென்க.
(51)    
இறைவியைக் காண்டல்:
 காணேய் அளகம் கரும்புய லேயியல் கார்மயிலே
மானே விழிமுக மாமதி யேதஞ்சை வாணன் வெற்பில்
தேனேய் தொடையலச் சேயனை யான்சொன்ன சேயிழையாள்
தானே இவளிது வேஇட மாகிய தண்புனமே.

(இ-ள்.)   நெஞ்சமே!  தஞ்சைவாணன்  வெற்பிடத்திருக்கும்   முரகக்கடவுளனைய
வண்டு   பொருந்திய  மாலையையுடைய  எம்  இறைவன்  சொன்ன   இடமாகிய
தன்புனம்     இதுவே; கருமையாகிய      புயலே     மணம்      பொருந்திய
அளகபாரமாயிருக்கின்றது; கார்காலத்து    மயிலே    இயலாயிருக்கின்றது; மானே விழியாயிருக்கின்றது; நிறைமதியே       முகமாயிருக்கின்றது; ஆதலால்,     அச்
சேயிழையாள் தான் இவளே என்றவாறு.

கான் - மணம்.   ஏய்தல் - பொருந்துதல்.   இயல் - சாயல்.   கார் - கார்காலம்.
விழி - கண். மாமதி - நிறைமதி. தேன் - வண்டு.  தொடையல் - மாலை.   சேய்:
முருகக்கடவுள்.

`கரும்புயலே    கான்    ஏயளகம்`    எனவும்,   `கார்மயிலேயியல்`   எனவும்,
`மதியே முகம்` எனவும், `தஞ்சைவாணன் வெற்பிற் சேய்` எனவும் மாறுக. ஈற்றசை
ஏகாரமொன்றும்   ஒழித்து,  ஏனைய  ஏகாரமெல்லாந்  தேற்றத்தின்கண்  வந்தன.
நெஞ்சம்;  மன்னிலையெச்சம்.  `அச்சேயனையான் சொன்ன`  என்பது இடைநிலை
விளக்கு.
(52)    
இகழ்ந்ததற்கிரங்கல்:
இகழ்ந்ததற்கு  இரங்கல்  என்பது,  தலைவி  பேரழகைக்  கண்டு பாங்கன் காணா
முன்னம் எம்பெருமானை அறிவின்றி இகழ்ந்தனம் என்று இரங்கிக் கூறல்.

 கொலைகா லயிற்படை நேரியர் கோன்அகங் கோடவங்கைச்
சிலைகால் வளைத்துந் திருத்திய வாணன்தென் மாறைவெற்பில்
முலைகால் கொளக்கண் டிளைத்தநுண் நூலிடை முற்றிழைகண்
வலைகால் பிணிப்பவந் தார்வருந் தாரல்லர் மாலுழந்தே.

(இ-ள்.) நெஞ்சமே!   கொல்லுந்  தொழிலை  உமிழ்கின்ற   வேற்படையையுடைய
சோழனது   உள்ளம்   மாறுபட  அழகிய  கைச்சிலையைக்  காலால்  வளைத்து,
அம்மாறுபாட்டைத்  திருத்திய வாணனது  தென்மாறை வெற்பிடத்து,  முலையிடங்
கொள்ளக் கண்டதனால் இளைத்த நுண்ணிய