|
|
நூல்போன்ற இடையையும், அணியும் அணியினிற் றாழ்வின்றி முற்றுப்பெற்ற அணியையும் உடையாளது கண்ணாகிய வலை காலிற் பிணிப்ப வந்தவர் ஆசை நோயை அனுபவித்து வருந்தாரல்லர் என்றவாறு.
|
எனவே, வருந்துவா ரென்றவா றாயிற்று. கொலை: ஆகுபெயர். காலுதல் - உமிழ்தல். அயிற்படை - வேற்படை.நேரியர்கோன் - சோழன். அகம் - உள்ளம். கோடல் - மாறுபடல்.அம் - அழகு.`கால்வளைத்து` என்புழி வேற்றுமைத் தொகை. திருத்தல் - செவ்விதாக்கல். கால்கொளல் - இடங்கொளல். முற்றிழை: அன்மொழித் தொகை. பிணித்தல் - கட்டல். உழத்தல் - அனுபவித்தல்:
|
| 1`கடலன்ன காமம் உழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்`
|
என்னுங் குறளானுமுணர்க. நெஞ்சம்: முன்னிலையெச்சம். |
(53) |
தலைவனை வியத்தல்: |
தலைவனை வியத்தல் என்பது, பாங்கன் தலைவி கண்வலையிற் சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்து வந்தது வியப்பென்ற அதிசயித்துக் கூறல். |
| தலங்கா வலன்தஞ்சை வாணன்முந் நீர்பொருந் தண்பொருந்தத் திலங்கார வல்வடக் கொங்கைவெற் பாலிணை நீலவுண்கண் பொலங்காம வல்லி கடைத்தவப் போது புடைபெயர்ந்து கலங்கா திருந்ததெவ் வாறெம்பி ரான்தன் கலைக்கடலே.
|
(இ-ள்.) நெஞ்சமே! இரண்டு நீலம்போன்ற உண் கண்ணையுடைய பொன்மயமாகிய காமவல்லிக்கொடி போன்றவள், உலகிற்குக் காவலனாகிய தஞ்சைவாணனது கடலையெதிருந் தண்ணிய பொருநையாற்றின்கண் பிறந்தொளிரும் முத்துக்களைக் கோத்த வலிய வடம்பூண்ட கொங்கையாகிய வெற்பினாலே கடைந்த அப்போது, அசைந்து எம்பிரான்றன் கலைக்கடலானது கலங்காதிருந்த தெவ்வாறு என்றவாறு. |
எனவே, எனக்கிது வியப்பாயிருந்ததென்றவா றாயிற்று. தலம் - உலகு. பாதலநீர், பூதலநீர், மீதல நீர் இம்மூன்று நீருங் வடியதால், கடல் முந்நீர் எனப் பெயராயிற்று. பொருதல் - எதிர்தல்.
|
பொருந்தம் - பொருநையாறு; பொருந் என்னும் தொழிற் பெயர் அஃறிணையாதலின் ஐகாரவீறு பெற்றது. ஆரம் - முத்து. பொருநையாறுங் கடலும் எதிர்ந்து கலந்தவிடத்துப் பிறத்தலான் `பொருந்தத்து இலங்கு ஆரம்` என்றார். பொலம் - பொன்.
|
|
1. குறள். நாணுத்துறவுரைத்தல் - 7. |