|
|
| 1`பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான`
|
என்பதனாலறிக.
|
காமவல்லி - கற்பகத்திற் படருங் கொடி :ஆகுபெயர் கடைதல் - ஈண்டு அறிவைச் சுழலச் செய்தல். புடைபெயர்தல் - அசைதல். கலைக்கடல் - கல்வியறிவாகிய கடல், நெஞ்சம் : முன்னிலையெச்சம். |
(54) |
தலைவியை வியத்தல்: |
தலைவியை வியத்தல் என்பது, தலைவியைப் பாங்கன் வியந்து கூறல்.
|
| வெங்கோல் மழைபொழி வானவர் போர்வென்ற மீனவர்தம் செங்கோல் முறைமை செலுத்திய வாணன்தென் மாறைவெற்பில் நங்கோன் மெலிய நலிகின்ற காமவெந் நஞ்சினைப் பைங்கோல் மணிவளை யார்தணி யாரல்லர் பார்வைகொண்டே.
|
(இ-ள்.) நெஞ்சமே! இரண்டு நீலம்போன்ற உண் கண்ணையுடைய பொன்மயமாகிய காமவல்லிக்கொடி போன்றவள், உலகிற்குக் காவலனாகிய தஞ்சைவாணனது கடலையெதிருந் தண்ணிய பொருநையாற்றின்கண் பிறந்தொளிரும் முத்துக்களைக் கோத்த வலிய வடம்பூண்ட கொங்கையாகிய வெற்பினாலே கடைந்த அப்போது, அசைந்து எம்பிரான்றன் கலைக்கடலானது கலங்காதிருந்த தெவ்வாறு என்றவாறு. |
வெங்கோல் - அம்பு. வானவர் - சேரர். மீனவர் - பாண்டியர். இறைமைத்தன்மை யுடையராதலால் உயர்த்தக் கூறியது. செங்கோல் - செவ்விய நீதி. நலிதல் - வருத்தல். கோல் - வளையிற்புள்ளி, கோலம் என்பது கடைக்குறையாய்க் கோல் என நின்றதென்பாருமுளர்.நெஞ்சம் : முன்னிலையெச்சம். |
இச்செய்யுளில் வியத்தற்பொருண்மை வந்தது எங்ஙனமெனின், எம்பெருமான் இறந்துபடாமற் காத்து இன்றுங் குறியிடத்துத் தனித்து வந்து நிற்றலின், இவர் பார்வைகொண்டு தணிப்பாரெனக் கூறியது வியப்பின்மேல ் நின்றது.
|
இவ்வைந்து பாட்டும் பாங்கன் தன்னுட் கூறியது. |
(55) |
|
1. தொல். எழு. புள்ளிமயங்கியல் - 61. |