பாங்கி மதியுடன்பாடு
97

 
வனம் - காடு.  ஆர்தல் - பொருந்தல்.   குடிஞை - கூகை.    பகை - காக்கை.
குளிர் - தினைப்புனத்திற்   கிளியோட்டுவோர்  மூங்கிலில் வீணைபோற்   கட்டித்
தெறிக்குங் கருவி.

1`தழலுந் தட்டையுங்  குளிரும் பிறவுங் கிளிகடி மரபின்` என்னும்  பத்துப்பாட்டில்,
`குளிரும்` என்பதற்கு  நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் கண்டு கொள்க.   குளிர்
எனினும், குளிரி  எனினும் ஒக்கும்.  புடைத்தல் - விரலாற் றெறித்தல். கிள்ளை -
கிளி. ஏனல் : ஆகுபெயர். கனம் - முகில்.   மா - கருமை. கனங்குழல்   என்புழி
உவமைத்தொகை. `கனமா நறுங்குழல்` பாரமாகிய நறிய குழல் எனினும்  அமையும்.
`என்பதற்கு` வேற்றுமை மயக்கம். ஓகாரம் : வினா.

(73)    
யாரே யிவர்மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்:
யாரே இவர்மனத்து   எண்ணம்   யாது   எனத்   தேர்தல்  என்பது,  இவ்வாறு
கண்ணியும்   தழையும்   ஏந்தி,  ஊர்   பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவி
நின்றவர்  யாரோ, இவர் மனத்து எண்ணம் யாதோ எனப் பாங்கி  தன் மனத்தில்
ஆராய்தல்.


1தரையார வண்புகழ் தேக்கிய வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
வரையாது நும்பதி யாதுநும் பேரென்பர் வார்துளிக்கார்
புரையானை யம்பொடு போந்தநுண் டோவென்பர் பூங்கொடியீர்
உரையாத தென்னென் பராலென் கொலோவிவர் உட்கொண்டதே.

(இ-ள்.) தரைநிறைய  வளவிய புகழை நிறைத்த வாணனது தமிழ்த்  தஞ்சைசூழ்ந்த
வரையிடத்து   நும்முடைய பதி யாது?   நும்முடைய   பெயர் யாது?   என்றுஞ்
சொல்லுவர்; அல்லாமலும், நெடிய துளியைச் சொரியும் மேகத்தையொக்கும் யானை
என் கையம்போடு வந்ததுண்டோ?  என்றுஞ் சொல்லுவர்;   அன்றியும், பூங்கொடி
போல்வீர்! யாதும் உரையாதது என் என்றுஞ் சொல்லுவர்;ஆதலால், இவர் யாரோ,
இவர் உட்கொண்ட எண்ணம் என் கொல்லோ, அறிகின்றிலேன் என்றவாறு.

தரை - பூவுலகம்.   ஆர - நிறைய.   வண்புகழ் - வளவிய    புகழ். தேக்கல் -
நிறைத்தல். தமிழ் - இனிமை. வரை - மலை. `பதி யாது`, `பேர் யாது` என மாறுக.
வார் - நெடுமை. துளிக் கார் - துளிசொரியுங் கார். புரை: உவமவுருபு.

`போந்தது` - `வந்ததோ வொருபோர்க் களிறே` என்ற தலைவன் முன்  வினாவிய
சொல்லையே பாங்கி யீண்டு, `யானை அம்பொடு போந்ததுண்டோ` என்று
அப்பொருளையே யெடுத்துக் கூறினமையால்,


1. குறிஞ்சிப்பாட்டு - 43.