1.  திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும்

வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
   உள்புகுந்து வலமாய் வந்தே
ஒரு விளக்கு ஆயினும் பசுவின் நெய்யுடன் தாமரை
   நூலின் ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
   கைலாசம் காணி ஆகும்!
திரு விளக்கிட்டார் தமையே தெய்வம் அளித்திடும்!
   வினையும் தீரும் தானே!
உரை