100.  பித்தளைக்கு நாற்றம் இயற்கை

நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும்
   ஒரு தீது நேர வந்தால்,
அத்தனையும் தீது என்பார்! பழி கருமக்
   கயவர் குணம் அகற்றல் ஆமோ?
வித்தகம் சேர் தண்டலையார் வள நாட்டில்
   சாம்பர்இட்டு விளக்கி னாலும்
எத்தனை செய்தாலும் என்ன? பித்தளைக்குத்
   தன்நாற்றம் இயற்கை ஆமே.

உரை