1.    வம்பருக்குத் தலைமை

வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்து இருந்தால்
   என்ன? அதுமாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால்
   என்ன? அதில் பலன் உண்டாமோ?
சம்பு உலவும் தண்டலையார் வள நாட்டில்
   வருந்து பல கழுதை தாமும்
அம்புவியில் கிடந்து என்ன? பாதாளம்
   தனில் கிடந்து என் ஆகும் தானே?

உரை