7.    பொன் பூவில் வாசனை

கற்பூர வல்லி ஒரு பாகர் செழுந்
   தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த
நற்பூமி தனில் பிறந்தோர் எல்லோரும்
   மக்கள் என நாட்டலாமோ?
அற்பூரும் பண்பு உடையார் நற்குணமும்
   பண்பு இலார் அழகும் காணின்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
   பூவும் எனப் புகலல் ஆமே.

உரை