8.  கலியாணப் பஞ்சம் இல்லை

சலியாமல் தண்டலையில் தாயகனார்
   அருள்கொண்டு தருமம் செய்யப்
பொலிவு ஆகிக் கொழுமீதில் வந்த பொருள்
   ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவு ஆகிச் செல்வம் உண்டாம்! வயல் முழுதும்
   விளைந்திடும் நன்மாரி ஆகும்!
கலியாணப் பஞ்சம் இல்லை! களப் பஞ்சம்
   இல்லை ஒரு காலும் தானே.

உரை