9.     இரக்கப் போனாலும் .....

இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே!
   சிவனே! எந்த நாளும்
இரக்கத்தான் புறப்பட்டீர்! என் தனையும்
   இரக்க வைத்தீர்! இதனால் என்ன?
இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீது
   என்றாலும், இன்மையாலே
இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது
   கருமம் என்னல் ஆமே.

உரை