13.    காட்டுக்கே எறித்த நிலா!

மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே
   செய்த நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
   தேடிஇட்ட வண்மை எல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
   வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே
   பெய்த மழை கடுக்கும் தானே!
உரை