19.    எண்ணம் எல்லாம் பொய் ஆகும்

மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்
   ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
   அலக்கு அழிந்து புரண்டே போவார்;
பண் உலவு மொழிபாகர் தண்டலையார்
   வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
   மெய் ஆகும் இயற்கை தானே!
உரை