2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்
   கருணைசெய்து, கோடி கோடி
யான்செய்த வினை அகற்றி நன்மைசெய்தால்
   உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர் வளரத் தவம்தானம்
   நடந்தேற உதவியாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என்
   செய்யும்? அதை மறந்திடாதே.
உரை