21.    விடியல்மட்டும் மழைபெயினும்

கொடியருக்கு நல்ல புத்தி சொன்னாலும்
   தெரியாது! கொடை இல்லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
   அவர் கொடுக்க மாட்டார் கண்டீர்!
படிஅளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
   உலகம் எலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்
   குச்சில் முளை வீசிடாதே!
உரை