23.    நாய் அறியாது...

தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்
   நெறிநாதர் தாமே தந்தை
யாய் அறிவார் எமது அருமை! பரவையிடம்
   தூது சென்றது அறிந்திடாரோ?
பேய் அறிவார் முழுமூடர்! தமிழ் அருமை
   அறிவாரோ? பேசுவாரோ?
நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்
   அந்த நியாயம் தானே!
உரை