24. எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்?

கட்டு மாங்கனி வாழைக்கனி பலவின்
   கனிகள் உபகாரம் ஆகும்;
சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளை எல்லாம்
   இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
   வாழ்ந்தாலும் என் உண்டாமே?
உரை