26.   செவிடன் காதினில் சங்கு குறித்தல்

பரியாமல் இடும்சோறும் ஊமைகண்ட
   கனவும் ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
   இல்லாதான் அறிவுமேதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
   நெறியாரே! கதித்த ஓசை
தெரியாத செவிடன் காதினில் சங்கு
   குறித்தது எனச் செப்பலாமே.
உரை