27.    மன்னுயிர்க்கு இரங்குவது

முன் அரிய மறை வழங்கும் தண்டலையார்
   ஆகமத்தின் மொழி கேளாமல்
பின் உயிரை வதைத்தவனும், கொன்றவனும்
   குறைத்தவனும், பேருளோனும்,
அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்
   நரகு உறுவர்; ஆதலாலே
தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு
   இரங்குவது தக்க தாமே.

உரை