முகப்பு
தொடக்கம்
29.
உருத்திராக்கப் பூனை!
காதிலே திருவேடம்! கையிலே
செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே
கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்
நெறியாரே! மனிதர் காணும்
போதிலே மௌனம்! இராப் போதிலே
ருத்திராக்கப் பூனை தானே!
உரை