அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும் பாதாளம் அதில் சென்றாலும் பட்டம் என வான் ஊடு பறந்தாலும் என்ன? அதில் பயன் உண்டாமோ? பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரே! முன்னாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப் படின் வருவது இல்லை தானே.