3.      இட்டபடியே

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்
   பாதாளம் அதில் சென்றாலும்
பட்டம் என வான் ஊடு பறந்தாலும்
   என்ன? அதில் பயன் உண்டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரே!
   முன்னாள் பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்
   படின் வருவது இல்லை தானே.

உரை