32. சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன?

அந்தணரை நல்லவரைப் பரமசிவன்
   அடியவரை அகந்தையால் ஓர்
நிந்தனை சொன்னாலும் என்ன? வைதாலும்
   என்ன? அதில் நிடேதம் உண்டோ?
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
   நெறியாரே! துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த
   போதில்என்ன? தாழ்ச்சி தானே?
உரை