34. சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?

சின்னம் எங்கே? கொம்பு எங்கே? சிவிகை எங்கே?
   பரி எங்கே? சிவியார் எங்கே?
பின்னை ஒரு பாழும்இல்லை! நடக்கை குலைந்தால்
   உடனே பேயே அன்றோ?
சொல் நவிலும் தண்டலையார் வளநாட்டில்
   குங்கிலியத் தூபம் காட்டும்
சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?
   வம்பர் இது தனை எண்ணாரே!
உரை