36.  ஆரியக் கூத்தாடுகினும்

பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்
   மாதரும் சூழப் பிரபஞ்சத்தே
பாரியை உற்றிருந்தாலும் திருநீற்றில்
   கழற்காய்போல் பற்று இல்லாமல்,
சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை
   நினைக்கின் முத்தி சேரல் ஆகும்;
ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்
   கண்ணாவது அறிவு தானே.
உரை