36.
ஆரியக் கூத்தாடுகினும்
பேரிசைக்கும்
சுற்றமுடன் மைந்தரும்
மாதரும்
சூழப் பிரபஞ்சத்தே
பாரியை உற்றிருந்தாலும் திருநீற்றில்
கழற்காய்போல்
பற்று இல்லாமல்,
சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை
நினைக்கின்
முத்தி சேரல் ஆகும்;
ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்
கண்ணாவது
அறிவு தானே. |
|