38.
செங்கோல் அரசனே தெய்வம்
நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்
புவி ஆளும் வண்மை செய்த
தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் :
கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்
ஆழ்நரகில் மூழ்குவாரே! |
|