4.  நன்மை செய்தால் நலம் பெறுவர்

தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்
   நெறியாரே தயவு செய்வார்!
வன்ம வினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
   பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்ம நெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
   பலர்க்கும் உபகாரம் ஆகும் :
நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்
   தீமை பெற்று நலிவர் தாமே.
உரை