41.
குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்
அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!
கேள்வியையும்
அறியார்! முன்னே
இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே
உபதேசம்
எவர்க்கும் செய்வார்!
வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
அவர்
கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவரும்
கொள்கை தானே.
|