42. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்'

நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?
   ஆதலினால், நினைந்த போதே
ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி
   வைப்பது அறிவு உடைமை அன்றோ?
கூற்று உள்ளம் மலைய வரும் தண்டலையா
   ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்று உள்ள போது எவரும் தூற்றிக் கொள்வது
   நல்ல கருமம் தானே?

உரை