44. ‘ஏன்
கருடா! சுகமா?'
ஆம்பிள்ளாய்! எனக் கொடுக்கும் பெரியோரை
அடுத்தவர்கள்
அவனிக்கு எல்லாம்
நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்
ஏவல்
செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளாய்! எனும் மேனித் தண்டலையார்
பூடணமாய்
வளர்த்த நாகம்
ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ? என்று
உரைத்த
விதம் என்னலாமே!
|