45.
புல்லரை அடுக்காதே
வடி இட்ட புல்லர்தமை அடுத்தாலும்
விடுவது
உண்டோ? மலிநீர்க் கங்கை
முடி இட்ட தண்டலை நாதரைப் புகழில்
பெருவாழ்வு
முழுதும் உண்டாம்!
மிடி இட்ட வினை தீரும்! தெய்வம் இட்டும்
விடியாமல்
வீணர் வாயில்
படி இட்டு விடிவது உண்டோ? அவர் அருளே
கண்ணாகப்
பற்றுவீரே!
|