47.
‘நெற்றி விழி காட்டுகினும் குற்றமே'
மற்றவரோ தமிழ்பாடி நாட்ட வல்லார்?
நக்கீரர்
வலியர் ஆகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தர நாயகர்
அடுத்து
விளம்பும் போதில்,
பற்று உள தண்டலை வாழும் கடவுள் என்றும்
பாராமல்
பயப்படாமல்
நெற்றி விழி காட்டுகினும் குற்றமே
குற்றம்
என நிறுத்தினாரே.
|