48. மாரி
பதின்கல நீரில் கோடையில்
ஒரு குடம் நீர் வண்மை
சீர் இலகும் தண்டலையார் திருவருளால்
அகம்
ஏறிச் செழித்த நாளில்,
பாரி என ஆயிரம் பேர்க்கு அன்ன தானம்
கொடுக்கும்
பலனைப் பார்க்க,
நேரிடும் பஞ்சம் தனிலே எவ்வளவு
ஆகிலும்
கொடுத்தால் நீதி ஆகும்
மாரிபதின் கலநீரில் கோடைதனில்
ஒருகுடம்நீர் வண்மை தானே.
|