49.   தண்டலையை வணங்கு

பிறக்கும்போது ஒரு பொருளும் கொடுவந்தது
   இல்லை! உயிர் பிரிந்து மண்மேல்
இறக்கும் போதிலும் கொண்டு போவதிலை!
   என்று சும்மா இருந்து வீணே
சிறக்கும் தாயினும் அருள்வார் தண்டலையில்
   சேராமல் தேசம் எல்லாம்
பறக்கும் காகம் அது இருக்கும் கொம்பு அறியாது
   எனத் திரிந்து பயன் பெறாரே!

உரை