51. சாம்
காலம் சங்கரா!
வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார்
அடிபோற்றி வணங்கி நாடிப்
போம் காலம் வருமுன்னே புண்ணியம் செய்து
அரிய கதி பொருந்து உறாமல்
ஆம் காலம் உள்ளது எல்லாம் விபசாரம்
ஆகி அறிவு அழிந்து வீணே
சாம் காலம் சங்கரா! சங்கரா!
எனின் வருமோ தருமம் தானே!
|