52. பெற்ற
தாய் பசித்து இருக்க,,,
சுற்றமாய் நெருங்கி உள்ளார் தனை அடைந்தார்
கற்று அறிந்தார் துணைவேறு இல்லார்
உற்ற வேதியர் பெரியோர்க்கு உதவி அன்றிப்
பிறர்க்கு உதவும் உதவி எல்லாம்
சொற்ற நான்மறை பரவும் தண்டலையாரே!
சொன்னேன்! சுமந்தே நொந்து
பெற்ற தாய் பசித்து இருக்கப் பிராமண
போசனம் நடத்தும் பெருமை தானே.
|