53. ‘நல்ல
மாட்டுக்கு ஓர் அடி!'
துன்மார்க்கர்க்கு ஆயிரம் தான் சொன்னாலும்
மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்!
சன்மார்க்கர்க்கு ஒரு வார்த்தை சொலும் அளவே
மெய் அதனில் தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறை புகழும் தண்டலையாரே!
சொன்னேன்! பதமே ஆன
நன்மாட்டுக்கு ஓர் அடியாம்! நற்பெண்டிர்க்கு
ஒரு வார்த்தை நடத்தை ஆமே.
|