54. இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமோ?

கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை!
   செங்கோலின் கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கம் அல்லால்
   நரகம் இல்லை! பொய் இது அன்றால்!
உரப்பார்க்கு நலம் புரியும் தண்டலையாரே!
   சொன்னேன்! ஒருமை ஆக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சம் உண்டோ?
   ஒருக்காலும் இல்லை தானே!

உரை