56. கெடுபவர்;
கெடாதார்!
உள்ளவரைக் கெடுத்தோரும் உதவி அற்று
வாழ்ந்தோரும் உறை பெற்றோரும்
தள்ளி வழக்கு உரைத்தோரும் சற்குருவைப்
பழித்தோரும் சாய்ந்தே போவார்!
பள்ள வயல் தண்டலையார் பத்தர் அடி
பணிந்தோரும் பாடினோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட
நல்லோரும் பெருகுவாரே.
|