59. சிறியோர் பெரியோர் ஆகார்

சிறியவராம் முழு மூடர் துரைத்தனமாய்
   உலகு ஆளத் திறம் பெற்றாலும்
அறிவு உடையார் தங்களைப்போல் சற்குணமும்
   உடையோர்கள் ஆக மாட்டார்;
மறிதரு மான் மழு ஏந்தும் தண்டலையாரே!
   சொன்னேன்! வாரி வாரிக்
குறுணி மை தான் இட்டாலும் குறி வடிவம்
   கண் ஆகிக் குணம் கொடாதே!

உரை