6.   கொக்கு எனவே நினைத்தனையோ?

முக்கணர் தண்டலை நாட்டில் கற்புடை மங்கையர்
   மகிமை மொழியப் போமோ!
ஒக்கும் எரி குளிர வைத்தாள் ஒருத்தி! வில்வேடனை
   எரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுது அளித்தாள் ஒருத்தி! எழு
   பரி தடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கு எனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
   என்று ஒருத்தி கூறினாளே!
உரை