60. பிச்சைச்
சோற்றினுக்குப் பேச்சு இல்லை
கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்
சாதி இல்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு
ஒருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்
மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்,
பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு
இல்லை பேச்சுத் தானே.
|