64. ‘பூசை
வேளையிலே கரடி'
நேசமுடன் சபையில்வந்தால் வேளை அறிந்து
இங்கிதமா
நிருபர் முன்னே
பேசுவதே உசிதம் அல்லால் நடுவில் ஒரு
வன்குழறிப் பேசல் எல்லாம்
வாசம் மிகும் தண்டலை நீள் நெறியாரே!
அபிடேக மலி நீராட்டிப்
பூசை பண்ணும் வேளையிலே கரடியை விட்டு
ஓட்டுவது போலும் தானே.
|