67. வெண்ணெய்
இருக்க நெய் தேடல்!
தண் அமரும் மலர்ச் சோலைத் தண்டலைநீள்
நெறியே! நின் தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையினும் மறுமையினும்
வேண்டியது உண்டு இதை ஓராமல்,
மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே
திரி பாவாணர் எல்லாம்
வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்
கொண்டு அலையும் வீணர் தாமே.
|