7.   பன்றி பல ஈன்றும் என்ன?

நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
   குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றி அறிவு இல்லாத பிள்ளை ஒரு
   நூறு பெற்றும் ஆவது உண்டோ?
மன்றில் நடம் புரிவாரே! தண்டலையாரே!
   சொன்னேன்! வருடம் தோறும்
பன்றி பல ஈன்றும் என்ன ? குஞ்சரம் ஒன்று
   ஈன்றதனால் பயன் உண்டாமே;
உரை