71. பகடிக்கோ பணம் பத்து! திருப்பாட்டுக்கு ஒரு காசு.

சக மிக்க தண்டலையார் அடிபோற்றும்
   மகராசர் சபையில் வந்தால்,
சுக மிக்க வேசையர்க்குப் பொன் நூறு
   கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ
அக மிக்க சோறு இடுவார்! அந்தணருக்கு
   எனின் நாழி அரிசி ஈவார்!
பகடிக்கோ பணம் பத்துத் திருப்பாட்டுக்கு
   ஒருகாசு பாலிப்பாரே.

உரை