76. சோறு
சொன்ன வண்ணம் செய்யும்
சோறு என்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே
செய்யும்! அருள் சுரந்து காக்கும்!
சோறு என்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே
செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?
சோறு என்ன, எளிதேயோ? தண்டலையார்
தம் பூசை துலங்கச் செய்யும்
சோறு என்ன செய்யும் எனில், சொன்ன வண்ணம்
செயும்! பழமை தோற்றும் தானே.
|